சீனர்களை வென்ற கருணாகர வளஞ்சியர் படை
சீனர்களை வென்ற கருணாகர தென்னிலங்கை வளஞ்சியர் படை:
குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் இரண்டு படைத்தளபதிகள் மிக சிறப்பு பெற்று விளங்கினர் . அவர்கள்
கருணாகர தொண்டைமான்
நரலோக வீரன்
இந்த இருவரும் வேளாளர் மரபை சார்ந்தவர்கள்.
கருணாகர தென்னிலங்கை வளஞ்சியர்
படை பிரிவுகள்:
முணை வீரக்கொடியார்
பதினென் பூமி வீரர்கள்
வீக்கொடியார் தந்திரம்
மும்மொழி தண்டம்
(வீரக்கொடியாரில் தண்டநாயகன்)
சேனா முகம்
(யானை மீது அமர்ந்து போர்புரியும் அம்பாரிகளான வீரக்கொடியார்)
இந்த படை பிரிவுகளே கருணாகர தொண்டைமானின் படைபிரிவுகளாக
கல்வெட்டுகளில் அறியப்படுகின்றனர்.
வீரக்கொடியார் என்ற இனத்தை சார்ந்த போர்படை குழுவே கருணாகர தொண்டைமான் படையில் 90% நிறைந்து
இருந்தனர்.
சோழன் கப்பல் படையும் கருணாகரன்
வசம் இருந்தது.
குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் இலங்கையை சோழ சிற்றரசர் ஒருவர் ஆண்டு வந்தார் இந்த சிற்றரசர் சுதந்திரமாக இலங்கையை ஆட்சிசெய்ய
விரும்பினார் இதானால் சிங்கள அரசரிடம் உதவிகேட்டு சோழ பேரரசிற்கு
துரோகம் செய்தார்.
மேலும் இலங்கையில் சீனர்கள் ஆதிக்கம் நிறைந்து காணப்பட்டது. சிங்களர்கள் சீனர்கள் வணிகம் செய்ய
முழுஅதிகாரம் வழங்கி இருந்தனர் இதனால் இலங்கையில் இருந்த சீனவணிகர்கள் ,சீனபோர்படைகள் எல்லாம் சிங்கள அரசுக்கு ஆதரவாக
இருந்தனர்.
குலோத்துங்க சோழன் தனக்கு துரோகம் செய்த சோழ சிற்றரசனை “சிவ துரோகி”
என அறிவித்து. அவன் மீது போர் தொடுக்கவும் இலங்கையில் சீனர்கள் ஆதிக்கத்தை குறைத்து சோழர் ஆதிக்கம்
நிலைநாட்ட
கருணாகர தொண்டை மானையும், வீரக்கொடியார் படை குழுவையும் இலங்கைக்கு போர் புரிய அனுபினார்.
போரில் சீனப்படைகளை சிதறடித்து
ஒடவிட்டனர். கருணாகர தொண்டைமான்
படையை கண்ட சீனர்கள் திசை எங்கும்
பயந்து ஒடினர்.
மேலும் சோழ சிற்றரசன் மற்றும் சிங்களவர்களுடன் போரிட்டு மாபெரும்
வெற்றி கண்டு சோழர் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.
கருணாகரதொண்டைமான் கலிங்கம் வென்ற சிறப்பை கொண்டு இவன் மேல்
செயங்கொண்டாரால் பரணி பாடபெற்றான்.
மேற்குறிப்பு:
கருணாகர தொண்டைமான் வேளான்
என்ற கல்வெட்டு ஆதாரம் இருக்கிறது
ராமானுஜர் குறிப்புகளும் கருணாகர தொண்டைமான் வேளாளர் குலத்தை
சார்ந்தவர் என தெளிவாக உள்ளது.
கருணாகர தொண்டைமான் படை குழு
வீரக்கொடியார்கள் பதினென்
வேளாபுறத்து வேளாளர் ஆவர்.