maruthanayagam pillai

மருதநாயகம் பிள்ளை என்றால் யார்????

உலக வரலாற்றிலே மூன்று முறை தூக்கிலிட்டும் சாகாத ஒரே மாவீரர் மருதநாயகம் பிள்ளை அவர்கள் மட்டுமே

வெள்ளாளர் வேளாளர் வரலாற்று தலைவர்களின் வீரத்தை பல்லாயிரக்கணக்கான ஆண்டு பழைமை வாய்ந்த சம்பவங்கள் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது

யார் இந்த மருதநாயகம் பிள்ளை???

அவரை வைத்து படமெடுக்க என்ன காரணம்???

அந்த காலகட்டத்தில் ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டம் என்பது சிவகங்கை, ராமநாதபுரம், மதுரையின் சில பகுதிகளில் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது

அந்த ராமநாதபுரம் சீமையில் இந்து சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த மாவீரர் மருதநாயகம் பிள்ளை அவர்கள்

இந்த மாவீரனின் வரலாற்று குறிப்பு பல்வேறு இடங்களில் பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களால் ஆதாரத்தோடு எழுதப்பட்டுள்ளது

இன்றும் இவரின் வம்சாவளியினர் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள்

அவர்கள் அளித்த மேலும் பல தகவல்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது

மாவீரர் மருதநாயகம் பிள்ளை அவர்கள் சிறுவயதில் இருந்தே போர் பயிற்சிகளில் வல்லவராக விளங்கி வந்துள்ளார்

இளமையில் வறுமையில் வாடிய அனுபவம் இருந்ததால் தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை பசியில் வாடியவர்களுக்கு அன்னமிட்டு மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இவரை ஆங்கிலேய படைகளால் கடைசி வரை நெருங்க முடியவில்லை

பிறகு இவருடன் இருந்த முக்கிய வீரரை விலைக்கு வாங்கி இவரின் ரகசிய இடங்களை அறிந்து இவரின் படைகளுக்கு செல்லும் உணவு தண்ணீர் போன்றவற்றை கோழை தனமாக தடுத்து நிறுத்தியது ஆங்கிலேய அரசு

இறுதி மூச்சு உள்ளவரை ஒரு துளி நீரும் அருந்தாமலும் கூட கடுமையான பதிலடியை ஆங்கிலேயனுக்கு மாவீரர் மருதநாயகம் பிள்ளை அவர்களின் படைகள் கொடுத்தது என்பது உலக அதிசயம்

பிறகு இவரின் நுழைவாயில் கோட்டை தகர்க்கபட்டு மாவீரர் மருதநாயகம் பிள்ளை அவர்கள் சிறை பிடிக்கபட்டார்

சிறைபிடிக்கப்பட்ட மறுநொடியே மாவீரர் மருதநாயகம் பிள்ளை அவர்களை தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கபட்டது

இவரை தூக்கு கயிற்றில் இணைத்து தூக்கிலிட்ட ஆங்கிலேய படைக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது

இவரின் கழுத்தில் தூக்கு கயிற்றை இருக்கிய போதும் இவர் உயிருக்கு ஒன்றுமே ஆகவில்லை

மீண்டும் இவரை சித்திரவதை படுத்தி கைகால்களை உடைத்து பல்வேறு ஆயுதங்களால் தாக்கப்பட்டு தூக்திலிடபட்டும் இவரின் உயிர் போகவே இல்லை

பிறகு மூன்றாவது முறை தூக்திலிடபட்டும் இவரின் மூச்சு காற்றை நிறுத்து அந்த ஆங்கிலேயபடைக்கு தெரியவில்லை

ஒன்றும் புரியாத ஆங்கிலேயபடை வியப்பில் ஆழ்ந்தே போனது

பிறகு இவரிடம் விசாரித்த போது போர் கலைகளில் மட்டும் சிறந்து விளங்காது, சிறு வயதில் இருந்தே யோகா கலைகளில் வல்லவராக திகழ்ந்தது மாவீரர் மருதநாயகம் பிள்ளை அவர்களின் வாக்குமூலத்தில் தெரியவந்தது

ஆகையால் மூன்று முறை தூக்கிலிட்டும் சாகாத அந்த மாவீரரின் தலையை உயிரோடு இருக்கும் போதே வெட்டி எடுத்து கொன்றது ஆங்கிலேய படை

அப்பேற்பட்ட மாவீரரை வரலாற்றில் இருந்து அகற்ற அவரை இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என்று பொய் கதை கட்டியது ஆங்கிலேய அரசு என்பது வேதனையிலும் வேதனை