V.O.CHIDHAMBARAM PILLAI

செக்கிழுத்த செம்மல்

ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளையின்  நினைவு நாளை முன்னிட்டு வ.உ.சி படித்த பள்ளியில் செக்கு எண்ணெய்யில் 100 சதுர அடி ஒவியச்சாதனை சிறுமி இரா.தீக்ஷனாவுக்கு பாராட்டு…

சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்தச் செம்மல் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் 84வது நினைவுநாளை முன்னிட்டு திருநெல்வேலி சிவராம் கலைக்கூடம் மாணவியும் புனித இக்னேஷியஸ் கான்வென்ட் 6ஆம் வகுப்பு மாணவியுமான இரா. தீக்ஷனா ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளையின் திரு உருவ படத்தை 100 சதுர அடியில் செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்யில் கருப்பு வெள்ளை ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார். இந்த ஓவியத்தை ஒரு மணி நேரத்தில் மாணவி வரைந்து இந்த சாதனையை படைத்துள்ளார். இவரை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி மாநகர காவல் உதவி ஆணையர் எஸ்.சேகர் ம.தி.தா பள்ளி தலைமை ஆசிரியர் உலகநாதன்  கல்வி சங்கமேலாளர் சட்டநாதன், வ.உ.சி இலக்கிய மாமன்றச் செயலாளர் முனைவர் கோ.கணபதி சுப்பிரமணியன் சிவராம் கலைக்கூட தலைமை பயிற்சியாளர் சிவராமகிருஷ்ணன், கலைக்கூட நிறுவனர் ஓவிய ஆசிரியர் கணேசன் மற்றும் ஒவிய ஆசிரியர்கள் சொக்கலிங்கம் திருவானனந்தம் ஆசிரியை ரூபா மற்றும் பலர் பாராட்டிப் பேசினர். சாதனை மாணவி இரா.தீக்ஷனாவின் பெற்றோர்களான ராஜசேகர் ஜனனியை அனைவரும் பாராட்டினர்…

சுதேசி செய்திகள் சார்பாக வாழ்த்துக்கள்….