S.விஐயதரணி MLA அவர்களின் கொள்ளு தாத்தா தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

பிறப்பு: (27 .07.1876)

இறப்பு: (26 .09. 1954)

 

20ஆம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வேளாளர் குலத்தில் பிறந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர்.

 

 

சிவதாணுப்பிள்ளை -ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிள்ளை பிறந்தார்.

 

இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகனுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார்.

 

 

ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம். ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார்.

 

நாகர்கோவிலிலுள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

 

உமையம்மை எனும் பெண்ணை 1901இல் மணம் முடித்தார். நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார்.

 

தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார்.

 

 

1938 ஆண்டு வெளியான அவருடைய மலரும் மாலையும் தொகுதியில் 25 க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்கள், ஏழு கதைப் பாட்டுகள் இடம்பெற்றிருந்தது.

 

“தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு” என்ற பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ள அவரது குழந்தைப் பாடல்களில் ஒன்று.

 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய நூல்கள் :

1.அழகம்மை ஆசிரிய விருத்தம்

 

2.ஆசிய ஜோதி, (1941)

 

3.மலரும் மாலையும், (1938)

 

4.மருமக்கள்வழி மான்மியம், (1942)

 

5.கதர் பிறந்த கதை, (1947)

 

6.உமார் கய்யாம் பாடல்கள், (1945)

 

7.தேவியின் கீர்த்தனங்கள்

8.குழந்தைச்செல்வம்

 

9.கவிமணியின் உரைமணிகள்

 

10.மருமக்கள்வழி மான்மியம்

 

11.காந்தளூர் சாலை

 

12.தோட்டத்தின் மீது வெள்ளை பசு

 

 

பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என பல எழுதியுள்ளார்.

 

 

24 டிசம்பர்1940ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை கவிமணி என்ற பட்டம் வழங்கினார்.

 

1943 இல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

 

பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார்.

 

1954 இல் கவிமணிக்கு‌ தேரூரில் நினைவு ஆலையம் அமைக்கப்பட்டது.

 

அக்டோபர் 2005ல் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் வாரிசு s. விஜயதரணி MLA,

தேசிய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் இன்றும் இருக்கிறார்கள் என்பது நம் வேளாளர்/வெள்ளாளர் சமுதாயத்திற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.

அவர்களின் பணியும், சமுதாய தொண்டும் மென்மேலும் தொடர சுதேசி செய்திகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.