Velalars meet cm

வேளாளர்கள் முதல்வருடன் சந்திப்பு

வேளாளர் வெள்ளாளர் பெயரின் மாண்பு காக்கும் போராட்டத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக சுமார் 11,000 பேர்களுக்கு மேல் ஒரு ஊர்வலத்தை நடத்திக் காட்டி தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியவர் நம்முடைய சங்கத்தின் மாநில துணை பெருந்தலைவர் அன்பு சகோதரர் கம்பம் கே.வி.பி. முருகேசன் அவர்கள்

அதன்மூலம் தமிழக அரசின் உயர் பதவியில் இருக்கக்கூடிய அரசியல் அதிகார மைய பிரமுகர்களுக்கு வெள்ளாளர்களின் வாக்கு கிடைக்காது என்ற உண்மையை உணர்த்தினார்

இந்த காரணத்திற்காக மிக அவசரமாக தமிழகத்திலே உள்ள நன்கு செயல்பட்டு கொண்டிருக்கும் கூடிய மாநிலப் தலைவர்களுடைய கூட்டத்திற்கு
அழைப்பு விடுத்து
முதல்வர் அவர்களையும் துணை முதல்வர் அவர்களையும் சந்திக்க அவசர அவசரமாக அழைத்தார்கள்

நேற்று காலை 8 மணி அளவில் முதல்வர் அவர்களுடன் அவரது இல்லத்தில் சந்திப்பு

அந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள சென்னை முதல் கன்னியாகுமரி வரை செயல்பட்டுக் கொண்டிருக்கும் கூடிய வெள்ளாளர் சங்கங்களின் மாநில தலைவர்கள்

ஆற்காடு முதலியார்கள் மாநில சங்கம்

துளுவ வேளாளர் மாநில சங்கம்

கார்காத்த வெள்ளாளர் மாநில சங்கம்

தொண்டை மண்டல சைவ வேளாளர்கள் சங்கம்

மாநில அகமுடைய முதலியார்கள் சங்கம்

திருநெல்வேலி சைவ வேளாளர் சங்கம்

கன்னியாகுமரி சைவ வேளாளர்கள் சங்கம்

இவர்களையெல்லாம்
அழைத்துக்கொண்டு

முதல் குரல் ஆசிரியர் டாக்டர்
கு.ப. ரவீந்திரன் அவர்களும்

உலக சைவப் பெருமக்கள் பேரவையின் தலைவர்
சேலையூர் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அண்ணாச்சி அவர்களும்

தமிழக சோழிய வெள்ளாளர் நல சங்கத்தின் சார்பில்

தலைவர்
கே.வி
சுகுமாறன் பிள்ளை அவர்களும்

தமிழக சோழிய வேளாளர் சங்கத்தின் மாநில பொருளாளர்
திருவாரூர் – பசுபதியாப்பிள்ளை அவர்களும்

அதிமுக கட்சியின் வழிகாட்டும் குழுவில் மிக உயர்ந்த பொறுப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கும் நம்முடைய உறவினர்

முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அண்ணன் சின்னசேலம் பா. மோகன் அவர்களின் துணையுடனும்

தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களையும்

துணை முதல்வர் மாண்புமிகு ஓபிஎஸ் அவர்களையும் சந்தித்தேன் நம்முடைய கண்டனத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்திருக்கின்றோம்

அடுத்த சந்திப்பு அடுத்த வாரத்திற்குள் இருக்கும் அப்போது இதனுடைய உண்மையான நிலையினை
விலக்கி சொல்வதாக உறுதி அளித்திருக்கிறார்கள்

நல்லது நடக்கும்….