Velalar Thontaiman

அறந்தாங்கி தொண்டைமான்

அறந்தாங்கி தொண்டைமான் மிழலை கூற்றத்து வேளாளர் என்று ஆங்கிலேயர் காலத்தில் கள்ளர்கள் தலமையிலான புதுக்கோட்டை அரசாங்கம் வெளியிட்ட a general history of the pudukkottai state என்ற நூலில் விரிவாக கூறியிருப்பார்கள்.

அதில் அறந்தாங்கி தொண்டைமான் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் போது இராமநாதபுரம் மறவர் இனத்தை சேர்ந்த சேதுபதி அவர்கள் தொண்டைமானை முதுகில் குத்தி கொலை செய்துவிட்டு சேதுபதியின் மைத்துனன் ஆன கள்ளர் ஒருவருக்கு அறந்தாங்கியாரின் பட்டமான தொண்டைமான் என்று பட்டம் கட்டி புதுக்கோட்டையை தலமையாக கொண்டு ஆளவைத்தார் என்றும் கூறுகிறது.

ஆக இதிலிருந்து நாம் தெளிவாக அறிவது கள்ளர்களுக்கு தொண்டைமான் பட்டமும் மற்ற பட்டங்களும் அரசியல் அதிகாரம் எப்படி எப்பொழுதிருந்து வந்தது என்று அவர்களே தங்கள் நூலில் தெளிவுபடுத்திவிடுகிறார்கள்.

அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள் என்று மேற்கூறிய ஆதாரத்தின் அடிப்படையிலேயே இதுநாள்வரை கூறிவந்தேன் ஆனால் தமிழறிஞர் காலஞ்சென்ற இராகவாங்கய்யங்கார் அவர்களால் பதிப்பிக்கப்பட்ட மிழழை சதகம் அறந்தாங்கியார் வேளாளர் என்பதை மிக அழமாக அழுத்தி கூறிவிடுகிறது.

இச்சதகத்தில் கூடுதல் தகவலாக மற்றொரு செய்தியும் நமக்கு கிடைக்கிறது.

ஸ்ரீராமபிரானின் மாமனாரானும் ஸ்ரீசீதா தேவியின் தந்தையுமான மிதிலை அரசர் ஜனகமஹாராஜாவை மிழலை கூற்றத்து வேளாளர் மரபை சேர்ந்தவராக மிழலை சதகம் கூறுகிறது.

படம் : இணைக்கப்பட்டுள்ளது.

ஜனக மஹாராஜா மேழிக்கொடி அதாவது ஏர்கலப்பை கொடியை உடையவர் என்பதை இங்கு கவனத்தில் கொண்டு நோக்கதக்கது.

மேலும் “ழ”கர உச்சரிப்பு வடமொழியில் இல்லாத காரணத்தினால் “மிழலை” என்பது “மிதிலை” என்று வழப்பட்டுள்ளது.

ஒரு சினிமா பாடலில் கூட “அழகிய மிதிலை நகரிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்” என்று சீதாதேவியை பாடியிருப்பார்காள்.

ஆக மிழலை வேளாளர்களே மிதிலையின் ஜனகமஹாராஜா என்பதை மிகதெள்ள தெளிவாக இச்சதக செய்யுள் வாயிலாக அறிய முடிகிறது.

ஜனகர் வழிவந்த கருணாகர தொண்டைமான் சோழர்களின் வடஇந்தியா போர்களை தலமைமேற்று நடத்தி மிகபெரிய வெற்றிகளை தேடித்தந்தவர்கள்.

சோழர்களின் ஆட்சி காலமே வேளாளர்களின் பொற்காலம்

சோழம் மீளும்

நன்றி
சோழர் சிவப்பிரகாஷ்
20/11/2020