வ.உ.சிதம்பரனார் சாலை பெயர் பலகை நிறுவப்பட்டது

பாண்டிய மண்ணின் ஒற்றை ஆளுமை என மீண்டும் நிரூபித்துள்ளார் திருமதி.அன்னலட்சுமி சகிலாகணேசன் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிரணி தலைவி அவர்கள்…

மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள தேசியதலைவர் ஐயா. வ.உ.சிதம்பரனார் சாலை என்ற பெயர் பலகையை சேதமடைந்த நிலையில் இருந்தது என்று
மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திருமதி.அன்னலட்சுமி சகிலாகணேசன் அவர்கள்
மூன்று வாரங்களுக்கு முன்பு ஐயா சிலை முன் நம் சொந்தங்களுடன் போராட்டம் நடைபெற்றது…

இதனை அறிந்த மதுரை மாநகராட்சி நிர்வாகம் நேரில் சந்தித்து தேசிய தலைவர் ஐயா வ.உ.சிதம்பரனார் சாலை பெயர் பலகையை அவ்விடத்திலேயே புதிதாக நிறுவப்படும் என மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உத்தரவு அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது…

அதன் உத்தரவின் பேரில் இன்று மதுரை சிம்மக்கல் அருகில் புதிதாக வ.உ.சிதம்பரனார் சாலை எனும் புதிய பெயர் பலகை நிறுவப்பட்டுள்ளது…

சுதேசி செய்திகள் சார்பாக அக்கா அண்ணலெட்சுமி சகிலாகணேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்….