ஆங்கிலேயன் “வாலேஸ்” பெயரை வ.உ.சி தன் மகனுக்கு ஏன் வைத்தார்…?

ஒரு சுத்தமான தமிழர் “வ.உ.சி” தன் மகனுக்கு ஏன் ஆங்கிலேயர் ஒருவரின் பெயரை வைத்தார்…?

 

 

சுதந்திர போராட்ட தியாகி ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு (11.06.1928)அன்று ஒரு மகன் பிறந்தார்.

 

 

இந்த மகிழ்ச்சியான செய்தியை தன் நண்பரிடம் சொன்னார் சொல்லிவிட்டு நண்பர் வீட்டு திண்ணையில் அமர்ந்தார் வ.உ.சி…

 

“ரொம்ப சந்தோஷம் பிள்ளைவாள். தாயும் சேயும் நலம்தானே?” என்று கேட்டார்.

 

“மிக்க நலமாக இருக்கிறார்கள். அடுத்து உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி ஒன்று சொல்ல போறேன்.”

 

“என்ன விஷயம் பிள்ளைவாள்?”

 

இப்போது பிறந்திருக்கும் என் பையனுக்கு ஒரு ஆங்கிலேயரின் பெயரை வைக்கப்போகிறேன்.

 

அவர் நண்பர் திகைத்துப்போய் வ.உ.சியின் முகத்தை பார்த்தார்..

 

என்ன சொல்கிறீர்கள் பிள்ளைவாள்…?

 

ஒரு ஆங்கிலேயரின் பெயரைத்தான் என் மகனுக்கு நான் வைக்கப் போகிறேன். என்று கூறினார்.

 

அவர் நண்பருக்கு எதுவும் புரியாமல், என்ன “பிள்ளைவாள்”. நம் வாழ்நாள் முழுவதும் எல்லாம் நாம் பாடுபட்டது ஆங்கிலேயர்களை இந்த நாட்டை விட்டு விரட்டிட‌ தானே…?

 

‘ஆமாம்’ என்று சொல்லியபடியே தலை குனிந்து படி‌ அமர்ந்திருந்தார் வ.உ.சி…

 

அப்படி இருக்கும்போது எந்த வெள்ளைக்காரர்களுக்கு எதிராக போராடினோமோ, அந்த வெள்ளைக்காரரின் பெயரை எப்படி உங்கள் மகனுக்கு வைக்கிறேர்கள் எதற்காக..?

 

 

அதற்கு ஒரு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. என்றார் வ.உ.சி

 

சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக வ. உ. சி ஆரம்பித்த கப்பல் கம்பெனியை, ஆங்கிலேயன் முடக்கினான்.பெரும் அளவு நஷ்டம் ஏற்பட்டது.

 

தன் சொத்துக்களை ஏழை எளிய மக்கள், கோவில்களுக்கு தானமாக வழங்கினார் வ.உ.சி.

40 ஆண்டு கால ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வ.உ.சிக்கு,

 

வ. உ.சி.யின் குடும்ப சூழ்நிலை கேள்விக்குறியானது.

 

வறுமையின் பிடியில் வாடிய வ.உ.சி. தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற என்னென்னவோ செய்து பார்த்தார்.

 

மளிகை கடை ஆரம்பித்தார். நஷ்டம். நண்பர்கள் விலகிப் போனார்கள்.

 

மண்ணெண்ணெய் வியாபாரம் ஆரம்பித்தார். அதிலும் நஷ்டம். சொந்தக்காரர்கள் யாரும் உதவ வில்லை.

 

தெரிந்தவர்கள் ஓர் இருவரை தவிர எவரும் பெரிதாக உதவி செய்யவில்லை.

என்ன தொழில் செய்வதென்று புரியாமல் இருந்து கொண்டிருந்தார் வ. உ. சி

 

அடிப்படையில் வ. உ. சி ஒரு வழக்கறிஞர். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் அவருடைய வழக்கறிஞர் உரிமத்தை ஆங்கிலேய அரசு ரத்து செய்து வைத்திருந்தது.

 

ஆனால் ஒரே ஒரு ஆங்கிலேயர் மட்டும் வ.உ.சி. மீது இரக்கம் கொண்டிருந்தார்.

 

அவர்தான் நீதிபதி வாலஸ்.

 

வ. உ. சி. ஒரு நல்ல மனிதர் என்பதை நன்கு அறிந்திருந்தார் வாலஸ்.

 

சாதி, மதம், இனம், மொழி எல்லாவற்றையும் கடந்து மனித நேயத்தோடு சிந்தித்தார்.

 

வ. உ.சிக்கு உதவி செய்வதற்காக அவர் இழந்திருந்த வக்கீல் உரிமையை, வாதாடி போராடி மீட்டுக் கொடுத்தார் நீதிபதி வாலஸ்.

 

நீதிபதி வாலஸ் தனக்கு செய்த உதவிக்கு நன்றிக் கடனாக, தான் என்ன செய்ய முடியும் என சிந்தித்தார்.

 

தன் மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயர் சூட்டினார்.

 

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

 

செய்ந்நன்றி கொன்ற மகற்கு”.

 

செக்கிழுத்ததால் மட்டும் அவர் நம் நினைவில் நிற்கவில்லை. செய்நன்றி மறவாத அந்த நல்ல குணத்தால்தான் சரித்திரத்தில் புகழ் பெற்று விளங்குகிறார் வ. உ. சி.

 

வ.உ.சியின் வாரிசு வாலேஸ்வரன் பிள்ளை அவர்கள் இந்த பூமியில் 88 ஆண்டு காலம் வாழ்ந்து (25.07.2015) அன்று இயற்கை எய்தினார்…